தேசிய தின வாரயிறுதி - நில எல்லைகளில் நெரிசலை எதிர்பார்க்கலாம்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Syamil Sapari
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
எதிர்வரும் தேசியத் தினத்தை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 7 முதல் 10 வரை இரு சோதனைச் சாவடிகளிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் ஹஜ்ஜுப் பெருநாள், விசாக தினம், ஜூன் விடுமுறைக் காலத்தில் (மே 26 முதல் ஜூன் 28 வரை) 18 மில்லியனுக்கும் மேற்பட்டோர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்துசென்றதாக ஆணையம் கூறியது.
ஜூன் 19ஆம் தேதி மட்டும் கிட்டத்தட்ட 598,000 பேர் கடந்தனர்.
உச்ச நேரங்களில் வாகனத்தில் சென்ற பயணிகள் 3 மணிநேரம் வரை காத்திருக்க நேர்ந்தது.
பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாகச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புச் சோதனைகள் நடைபெற்று வருவதாக ஆணையம் தெரிவித்தது.
ஆகஸ்ட் 7 முதல் 10 வரை இரு சோதனைச் சாவடிகளிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் ஹஜ்ஜுப் பெருநாள், விசாக தினம், ஜூன் விடுமுறைக் காலத்தில் (மே 26 முதல் ஜூன் 28 வரை) 18 மில்லியனுக்கும் மேற்பட்டோர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்துசென்றதாக ஆணையம் கூறியது.
ஜூன் 19ஆம் தேதி மட்டும் கிட்டத்தட்ட 598,000 பேர் கடந்தனர்.
உச்ச நேரங்களில் வாகனத்தில் சென்ற பயணிகள் 3 மணிநேரம் வரை காத்திருக்க நேர்ந்தது.
பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாகச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புச் சோதனைகள் நடைபெற்று வருவதாக ஆணையம் தெரிவித்தது.
ஆதாரம் : Mediacorp Seithi